விருதுநகர் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

 
mkstalin

விருதுநகர்‌ மாவட்டம்‌ சாலைவிபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்‌ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர்‌ மாவட்டம்‌ மற்றும்‌ வட்டம்‌, செங்குன்றாபுரம்‌ கிராமம்‌, மூளிப்பட்டி விலக்கு அருகில்‌ கடந்த 05.11.2023 அன்று மாலை மதுரை மாவட்டம்‌, பேரையூர்‌ வட்டம்‌, முருகனேரி கிராத்தைச்‌ சேர்ந்த பெண்கள்‌, விவசாயப்‌ பணிகளை முடித்துவிட்டு திரும்பும்போது செங்குன்றாபுரம்‌ கிராமம்‌-மூளிப்ட்டி சாலையின்‌ அருகில்‌ அமர்ந்திருந்தபோது அழகாபுரியிலிருந்து விருதுநகர்‌ நோக்கி சென்று கொண்டிருந்த கார்‌ எதிர்பாராத விதமாக தடம்மாறி பெண்‌ தொழிலாளர்கள்‌ மீது மோதிய விபத்தில்‌ மதுரை மாவட்டம்‌, பேரையூர்‌ வட்டம்‌, ஆறுமுகனேரி. கிராமத்தைச்‌ சேர்ந்த திருமதி.பேச்சிம்மான்‌ (வயது 55) க/பெ. சோனைமுத்து மற்றும்‌ திருமதி.முத்துச்செல்வி (வயது 42) க/பெபவுன்ராஜ்‌ ஆகியோர்‌ சம்பவ இடத்திலேயே உயிர்‌ இழந்துள்ளார்கள்‌ என்ற துயரமான செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்‌.  

மேலும்‌, இவ்விபத்தில்‌ பலத்த காயமடைந்து விருதுநகர்‌ அரசு மருத்துக்‌. கல்லூரி மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவரும்‌ மதுரை மாவட்டம்‌, பேரையூர்‌ வட்டம்‌, ஆறுமுகனேறி கிராமத்தைச்‌ சேர்ந்த 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும்‌ அறிவுறுத்தியுள்ளேன்‌. இவ்விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினராக்கும்‌ அவர்களது உறவினர்களுக்கும்‌ எனது ஆடுந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம்‌ ரூபாயும்‌, பலத்த காயமடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வரும்‌ நான்கு நபர்களுக்கு தலா ஒரு இலட்சம்‌ ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.