தமிழகம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி...

 
 தமிழகம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி...

நாடு முழுவதும் பயணித்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி,  இன்று தமிழ்நாடு வந்தடைந்தது.

chess

 சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  நடைபெறவுள்ளது.  இந்தப் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்  பங்கேற்க உள்ளனர். இந்த செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வருகை தர ஆரம்பித்துவிட்டனர்.  அவர்கள் அனைவரும் நட்சத்திர விடுதிகளில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

 தமிழகம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி...

 முன்னதாக  இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவுள்ள  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி பேரணி கடந்த ஜூன் 19 ஆம் தேதி தொடங்கியது.  டெல்லியில்  பிரதமர் மோடி , ஜோதி ஓட்டத்தினை தொடங்கி வைத்தார்.  இதனையடுத்து இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி , நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.  நாடு முழுவதும் பயணித்து செஸ் ஒலிம்பியாட் ஜோதி,  இன்று தமிழகம் வந்தடைந்தது. கோவைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள்,  கோவை மாவட்ட ஆட்சியர் , அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும்  500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இந்த ஜோதி , மதியம் 1 மணியளவில் சேலம் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.