செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர்களுக்கான பயிற்சி சென்னையில் தொடங்கியது..

 
செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர்களுக்கான பயிற்சி சென்னையில் தொடங்கியது..


செஸ்  ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கான முதல்கட்ட பயிற்சி  சென்னையில்  தொடங்கியிருக்கிறது.  

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  சென்னை, மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆக.10 வரை   நடைபெறவுள்ளது.  இந்த போட்டியில் பங்கேற்க 170க்கும் மேற்பட்ட நாடுகள் பதிவு செய்துள்ளன. மேலும் பல நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்க பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அண்மையில் அறிவித்தது. 4 அணிகளாக பங்கேற்கும்  இந்திய அணிக்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவார் என்றும், கிராண்ட் மாஸ்டர் பிரவீன் திப்சே அணியை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர்களுக்கான பயிற்சி சென்னையில் தொடங்கியது..

இதில் ஆடவர் அணிக்கு ஸ்ரீநாத், ஆர்பி ரமேஷ் ஆகிய இருவரும், மகளிர் அணிக்கு அபிஜித் குண்டே, ஸ்வப்னில் ஆகியோரும் பயிற்சியாளராக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆடவர் பிரிவில்  அணி A ல்,   1. விதித் சந்தோஷ் குஜ்ராத்தி,  2. ஹரி கிருஷ்ணா, 3. அர்ஜுன் , 4. எஸ்.எல். நாராயணன், 5. சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோரும், இரண்டாவது ( B )அணியில்,  1. நிஹல் சரின், 2. குகேஷ், 3. அதிபன், 4. பிரக்ஞானந்தா, 5. சத்வனி ரனாக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர்களுக்கான பயிற்சி சென்னையில் தொடங்கியது..

 இதேபோல் மகளிர் பிரிவில் முதல் (A)  அணியில், 1. கொனேரு ஹம்பி, 2. ஹரிகா, 3. ஆர். வைஷாலி,  4. தானியா சச்தேவ், 5. குல்கர்ணி பக்தி ஆகியோரும்,  இரண்டாவது ( B) அணியில் 1. வந்திகா அகர்வால், 2. செளம்யா சுவாமிநாதன், 3. கோம்ஸ் மேரி ஆன், 4. பத்மினி, 5. திவ்யா தேஷ்முக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில்  இன்று இந்திய அணியின் A பிரிவு வீரர்களுக்கான பயிற்சி முகாம்  சென்னையில் தொடங்கியிருக்கிறது.  இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இஸ்ரேல் கிராண்ட் மாஸ்டர் கெல்ஃபாண்ட் ஆகியோர் வீரர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர். மேலும்   A பிரிவு பயிற்சியாளர்களான ஸ்ரீநாத் நாராயணன் மற்றும் அபிஜித் குண்டே ஆகியோரும்  பயிற்சி முகாமில் பங்கேற்க இருக்கின்றனர்.