தேனாம்பேட்டை , தி.நகர் உள்ளிட்ட 6 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..

 
  குடிநீர் வாரியம்


சென்னையில் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள 6 இடங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தின் இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 750 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 750 மிமீ விட்டமுள்ள பிரதான உந்து குழாயை இணைக்கும் பணி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஸ்டெர்லிங் சாலையில் மேற்கொள்ளப்பட்ட உள்ளது.

இதனால், நாளை (31-ம் தேதி) இரவு 7 முதல் செப்.1-ம் தேதி மதியம் 3 மணி வரை நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இப்பகுதி பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரி மூலமாக குடிநீரை பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும்குடிநீர் விநியோகம் எந்த தடையுமின்றி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.