புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் 20,500 போலீசார் பாதுகாப்பு

 
police

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. 

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 19,000 போலீசார், 1,500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 20,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புத்தாண்டையொட்டி சென்னையில் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு இரவில் சென்னை முழுவதும் 425 இடங்களில் வாகன தணிக்கைக் குழு ஏற்படுத்தப்படும். 

முக்கிய சாலைகளில் வாகன பந்தயத்தை தடுக்க 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும். புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 மாலை முதல் ஜனவரி 1 வரை கடலில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரையில் கண்காணிப்பு பணிகள் நடைபெறும். கடலில் யாரும் மூழ்கிடாமல் தடுக்க காவல் துறை, உயிர்காக்கும் பிரிவினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.