சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம்

 
tn

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3 மற்றும் 5-ல் மேல்நிலை உபகரணங்கள் மற்றும் மாறுதல் அமைப்பில் மின்சார பணிக்களுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.239.41 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3 (மாதாவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) மற்றும் வழித்தடம் 5-ல் (மாதவரம் பால்பண்னை முதல் சிஎம்பிடி மற்றும் மாதவரத்தில் உள்ள பணிமனை உட்பட) மேல்நிலை உபகரணங்கள் மற்றும் மாறுதல் அமைப்பில் (OHE & switching Station) அனைத்து வகையான மின்சார பணிகளுக்கான ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ. 239.41 கோடி மதிப்பில்வழங்கப்பட்டுள்ளது.

metro

மின்சார அமைப்பின் ஒட்டுமொத்த வடிவமைப்பு, தடையற்ற சேவைகளை வழங்குவதற்காக பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான மின்சாரம், அத்துடன் திறமையான மின் அமைப்பின் செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதை மையமாகக் கொண்டுள்ளது. நம்பகமான மேல்நிலை உபகரணங்களை வழித்தடம் 3-ல் 35.043 கி.மீ நீளத்திற்கு, வழித்தடம் 5-ல் 16.16 கி.மீ நீளத்திற்கு மற்றும் மாதவரம் பணிமனையில் மொத்த பாதை 21 கி.மீ நீளத்திற்கும் வழங்குகிறது.

metro

இந்த ஒப்பந்தம் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ. 239.41 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் கட்டார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.