சென்னை எண்ணூரில் water bike ஓட்டிய மேயர் ப்ரியா..!
Mar 2, 2026, 12:07 IST1772433467201
பெருநகர சென்னை மாநகராட்சி அன்னை சிவகாமி நகரில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் படகுக் குழாமினை சென்னை மேயர் பிரியா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
சென்னை எண்ணூரில் உள்ள குட்டையை குளமாக மாற்றி சென்னை மாநகராட்சி படகுக் குழாம் அமைத்துள்ளது. இந்த படகுக் குழாமில் மேயர் பிரியா வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
சென்னை திருவொற்றியூரில் புதிய படகு குழாமை திறந்துவைத்த சென்னை மேயர் பிரியா, வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்தார்.#Chennai | #MayorPriya | #Boating pic.twitter.com/TSwK0j2xZI
— PttvOnlinenews (@PttvNewsX) March 2, 2026

