கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

 
pm modi

கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தாண்டில் 5வது முறையாக பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தனதார். காலை 11 மணியளவில் கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இதனை தொடர்ந்து மீண்டும் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தரவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி கோவையில் இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் தேதி 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில், கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவையில் பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ நடத்த பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்து இருந்தார். பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதாலும் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.