ஒரே நாளில் 3வது முறையாக உயர்ந்த தங்கம்! ரூ.1,240 அதிகரிப்பு

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3வது முறையாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இன்று அட்சய திருதியை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் மூன்றாவது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஏராளமானோர் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குவர். இன்றைய தினம் தங்கம் வாங்கினால், குடும்பத்தில் மேலும் செல்வம் பெருகும் என்று நம்புவதால் ,  ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிட வேண்டும் என்று பலரும் விரும்புவர்.

அட்சய திருதியை நாளான இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், அதன்பின் மீண்டும் 360 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரே நாளில் 3வது முறையாக தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்து ரூ.54,160-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,770 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.