சென்னையில் அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில்’ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்சையான நிலையில் திமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கையில் அம்பேத்கர் புகைப்படம் கொண்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


