தலைக்கேறிய ஓட்கா போதை! தஞ்சையிலிருந்து சென்னைக்கு படிக்க வந்த கல்லூரி மாணவி பலி
Mar 3, 2025, 09:36 IST1740974767367

சக நண்பர்களுடன் மதுகுடித்து போதை அதிகமானதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்வினி(19), கேளம்பாக்கம் அடுத்த இந்துஸ்தான் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனியார் ஏகாட்டூரில் விடுதியில் தங்கியிருக்கும் நிலையில் ஊரிலிருந்து திரும்பிய அஸ்வினி தனது தோழியின் அறையில் தங்கி இரவு முழுவதும் (ஓட்கா ஜோனோ) மது குடித்துள்ளார். இதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். ஆனால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் பிரேத்தை கைப்பற்றிய கேளம்பாக்கம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் விசாரணை செய்து வருகிறார்கள்.