23 ஆக உயர்கிறது சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை ..

 
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  மண்டலங்களின் எண்ணிக்கை 15ல் இருந்து  25 ஆக உயர்த்தப்படுகிறது.  

கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பெருநகரம் அந்தஸ்த்தை பெற்றது. அதன்பின்னர் 155 வார்டுகள், 10 மண்டலங்களுடன் செயல்பட்டு  வந்தது. பின்னர்  திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்த பேரூராட்சி பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு  200 வார்டுகளாக உயர்த்தப்பட்டன. இதனால் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையும் 15 ஆக உயர்ந்தது.  சென்னை மாநகராட்சியை உள்ளடக்கிய பகுதிகளில் மொத்தம்  22 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

சென்னை மாநகராட்சி

ஆனால் அவற்றில் 16 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே சென்னை மாவட்டத்திற்குள் அடங்கும்..  மீதமுள்ள 6 சட்டமன்ர தொகுதிகள்  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கின்றன.  இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்ப  மண்டலங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று  அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி 23 மண்டலங்கலாக மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி

அதன்படி 22 சட்டமன்ற தொகுதிகளில் 23 மணடலங்கள் அமைக்கப்பட உள்ளன.  இதற்கான பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியிருக்கிறது.  இந்த புதிய மண்டலங்கள் மற்றும் அவற்றில்  இடம்பெறவுள்ள வார்டுகளின் விவரங்கள் அடங்கிய உத்தேசபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அதில், “ திருவொற்றியூர் மண்டலத்தில் 18 வார்டுகளும், மாதவரம் பகுதி பொன்னேரி பகுதியில் 15 வார்டுகளும், கொளத்தூர் 7 வார்டுகள், பெரம்பூர் 7, ஆர்.கே.நகர் 7, ராயபுரம் 6 , துறைமுகம் 6.  திரு.வி.க.நகர் 6, வில்லிவாக்கம் 6, அம்பத்தூர் மதுரவாயல் பகுதி13,  அண்ணாநகர் 7, எழும்பூர் 6,  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 7,  ஆயிரம்விளக்கு 7,  தி.நகர் 7 விருகம்பாக்கம் மதுரவாயல் பகுதி 6,  மதுரவாயல் 15, ஆலந்தூர் பகுதி பல்லாவரம் சோழிங்கநல்லூர் 12, சைதாப்பேட்டை  7, மயி லாப்பூர் 7, வேளச்சேரி  8, சோழிங்கநல்லூர் வேளச்சேரி ஆலந்தூர்11, சோழிங்கநல்லூர் 9.” ஆகிய 23 மண்டலங்களாக   உயர்த்தப்பட உள்ளது.