#BREAKING செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

 
chengalpattu

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 2ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும், 5ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, கொரோனா பரிசோதனை, இருதய பரிசோதனை, உள்ளிட்ட 26 பிரிவுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிவதால் எப்போதுமே மருத்துவமனை பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் நோயாளிகளை காண வந்த உறவினர்கள் மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் உள்ள லிப்டில்  மருத்துவர், செவிலியர் என மொத்தம் 12 பேர் ஏறிஉள்ளனர். லிப்டு கீழ்நோக்கி இறக்க துவங்கியதும் பாரம் தாங்காமல் அருந்து பாதியில் நின்றது. உடனடியாக லிப்டில் இருந்தவர்களின் அலரல் சத்தம் கேட்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக லிப்டை உடைத்து உள்ளிருந்தவர்களை பாத்திரமாக காப்பாற்றினர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் நகர காவல்துறையினர் சமபவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.