தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார் : முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்
![stalin](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/51aaeb6f1dc8a054815a6c9a8d667f75.jpeg)
தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் திராவிட மாடல் அரசின் வெற்றிகரமான திட்டங்களை பதிவிட்டுள்ளார்.
மேலும் முதல்வர் மு க ஸ்டாலின், மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.
— M.K.Stalin (@mkstalin) March 6, 2024
தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?
ஒரு ரூபாய் என்றாலும்… pic.twitter.com/HqcBprllU5
ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் #NeengalNalama திட்டம் என்றும் பதிவிட்டுள்ளார்.