செக் மோசடி வழக்கு- தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை

 
செக் மோசடி வழக்கு

காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் கடிதல், தங்க மீன்கள், தரமணி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார். இவருக்கு எதிரக சினிமா பைனான்சியர் ககன் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டில்  தன்னிடம் திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் 2.6  கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், இதற்காக 2017 ல்
கடன் தொகைக்காக தயாரிப்பாளர் வழங்கிய  காசோலை வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாரை காசோலை மோசடி வழக்கில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்த வழக்கு ஜார்ஜ் டவுண் நான்காவது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.என். சந்திர பிரபா முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி  தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  தீர்ப்பளித்தார். மேலும் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.