புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து : 10க்கும் மேற்பட்டோர் காயம்..
புதுக்கோட்டை தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பக்தர்கள் தேரின் வடத்தை அதிக வேகமாக இழுத்ததால் தேர சாய்ந்து விபத்து என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயியில், இன்று ஆடித்தேரோட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேரோட்டத்தில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிலையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட தேரானது, வடம் பிடித்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேருக்கு அருகில் இருந்த பக்தர்கள், தேரில் இருந்து பூஜை செய்து கொண்டிருந்த சுவாமிகள் என 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் தேர் திடீரென முன்பக்கமாக சரிந்து விழுந்ததைப் பார்த்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடினர். தேரின் வடத்தை பக்தர்கள் வேகமாக பிடித்து இழுத்ததால், சாய் தளத்தில் இருந்து சறுக்கி தேர் முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. இருந்தபோதிலும், தேர் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விராசணை மேற்கொண்டு வருகின்றனர். தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்த வீடியோ வெளியாகி , வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணத்தில் உள்ள வரணேஸ்வரர் கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம், மருத்துவமனையில் அனுமதி. pic.twitter.com/KFGLNrEZkp
— Senthil Nathan A (@senthu_ap) July 31, 2022