#BREAKING சென்னை- தூத்துக்குடி முத்துநகர் உட்பட 10 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை – தூத்துக்குடி முத்துநகர் உட்பட 10 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
மதுரை – தூத்துக்குடி தடத்தில், யார்டு மற்றும் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
★ கேரளா மாநிலம் பாலக்காடு – தூத்துக்குடி பாருவி ரயில் வரும் 14 முதல் ஜனவரி 27ல் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்
★ தூத்துக்குடி – பாலக்காடு பாருவி ரயில் வரும் 15 முதல் ஜனவரி 28 வரை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்
★ தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் விரைவு ரயில் வரும் 20ம் தேதி கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும்
★ எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் வரும் 20, 21, 22ம் தேதிகளில் வாஞ்சிமணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும்
★ தூத்துக்குடி – எழும்பூர் முத்துநகர் விரைவு ரயில் வரும் 21, 22, 23ம் தேதிகளில் வாஞ்சிமணியாச்சியில் இருந்து இயக்கப்படும்
★ கர்நாடகா மாநிலம் மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில் வரும் 20, 21, 22ம் தேதிகளில் வாஞ்சிமணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும்
★ தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் வரும் 21, 22, 23ம் தேதிகளில் வாஞ்சிமணியாச்சியில் இருந்து இயக்கப்படும்
★ குஜராத் மாநிலம் ஓக்ஹா – தூத்துக்குடி விவேக் விரைவு ரயில் வரும் 19ம் தேதி கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்
★ தூத்துக்குடி – ஓக்ஹா விவேக் விரைவு ரயில் வரும் 21ம் தேதி கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும்
★ மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி விரைவு ரயில் வரும் 21ம் தேதி கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


