நிலவின் சமதள புகைப்படத்தை எடுத்த லேண்டர்

 
Moon

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பிறகு விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் சமதள புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.

படம்

சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தினர். பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த விண்கலம், சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. அதன்பின், நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, அதிலுள்ள சென்சார்கள் மூலம் தரையிறாங்க சரியான சமதள பரப்பு தேர்வு செய்யப்பட்டு, வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்நிலையில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பிறகு விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் சமதள புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. மேலும் நிலவின் சமதள பகுதியை தேர்வு செய்து பத்திரமாக லேண்டர் தரையிறங்கியதாக இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இந்த புகைப்படம் நிலவில் தரையிறங்கிய பிறகு லேண்டிங் இமேஜர் கேமராவால் படம் பிடிக்கப்பட்டது. இது சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது. புகைப்படத்தில் லேண்டரின் ஒரு கால் மற்றும் அதனுடன் இணைந்த நிழல் தெளிவாக தெரிகிறது.