சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் திடீரென வழிமாறி சென்றதால் பரபரப்பு!

 
andhra

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு ராயுடு சென்ற ஹெலிகாப்டர் திடீரென திசைமாறி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திர மாநிலத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள், கட்சி விழாக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதேபோல் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து பேசி வருகிறார். 

இந்த நிலையில், அரக்கு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அரக்கு பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் அரக்கு பகுதியை நோக்கி செல்லாமல் திசைமாறி வேறு பகுதிக்கு சென்றுள்ளது. இது குறித்து ஹெலிகாப்டரின் பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சுதாரித்துக்கொண்ட பைலட் மீண்டும் விமானத்தை அரக்கு பகுதிக்கு திருப்பி அங்கு சென்றடைந்தார். இதனால் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.