சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

 

சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழையின் காரணமாக வெப்பம் தணிந்து, வெயில் குறைவாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நகர்புறங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கடலோர மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

தொடர்ந்து 6 மாவட்டங்கள் வெப்பம் 104 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறிய அவர், வேலூர், நாகை, சேலம், புதுவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை எட்டும் என்றும் தெரிவித்தார். மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.