தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கள், மதுரை, விருதுநகர், தூந்துக்குடி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

rn

இந்நிலையில் தமிழ்நாட்டில் மாலை நான்கு மணி வரை சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர் ,வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ,கிருஷ்ணகிரி, தர்மபுரி ,திருவண்ணாமலை ,ஈரோடு ,சேலம், நாமக்கல், மயிலாடுதுறை ,கடலூர் ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, திருவாரூர் , தஞ்சாவூர், நாகப்பட்டினம் ,அரியலூர் ,பெரம்பலூர் ,புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.