அடுத்த மூன்று மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

 
rain

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

tn

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், சென்னை ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது  முதல் மிதமான மழைக்கு  வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.