மாலை 4 மணிவரை 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

தெற்கு இலங்கை கடலோர தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில்  தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
 

tn

இந்நிலையில் தமிழ்நாட்டில் மாலை 4 மணிவரை கன்னியாகுமரி , திருநெல்வேலி, தென்காசி , தூத்துக்குடி, ராமநாதபுரம் , புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் , மதுரை , தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.