அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

 
rain

 தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

rain

இந்நிலையில் தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.