சென்னையில் 2 நாட்களுக்கு மிக கனமழை ; இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
rain

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்ன வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது . அத்துடன்  இன்று 10  மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலிலிருந்து வழக்கில் கர்நாடக மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை நிலவும் காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் ஈரோடு ,நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி, திண்டுக்கல், திருப்பூர் ,சேலம் ,தர்மபுரி ,நாமக்கல் , கள்ளக்குறிச்சி ,மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

கடந்த சில நாட்களாக சென்னையில் செய்து வந்த கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ,வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவியது . இதன் காரணமாக மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர தமிழக கடலோரப் பகுதி, கடலோரப் பகுதி,  கேரள கர்நாடக கடலோரப் பகுதி ஆகிய இடங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.