வேட்புமனுவில் பொய்யான தகவல் - ஈபிஎஸ்- ஐ விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு!
May 16, 2023, 08:33 IST1684206204553
![EPS](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/c54467eb721235a301932dcedafabae1.jpeg)
தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி சேர்ந்த நிலானி என்பவர் சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தகவல்களை மறைத்து பொய்யான பிராமண பத்திரத்தை தாக்கல் செய்ததாக கூறியுள்ளார். சொத்துக்கள் ,தொழில் ,வருமான ஆதாரங்கள்,உண்மையான சொத்துக்களின் சந்தை மதிப்பு, கல்வி தகுதி ஆகியவற்றில் தவறான தகவல்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், எடப்பாடி பழனிசாமி மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ (1) (2), (3) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.