‘மாநில அரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்'... மத்திய அரசு வைத்த முதல் செக்

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை பறித்தது மத்திய அரசு.
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் புதிய விதிமுறைகளின்படி, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை, அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும். ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையின்மை சான்று தேவை என்றிருந்தது குறிப்பிடதக்கது.