கள்ளச்சாராய விவகாரத்தில் 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி

 
rr

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தற்போது வரை  3 ஆண் , 2 பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

arrest

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 3 பேர் மீது  சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா மீது கொலை வழக்குப்பதிவு பதியப்பட்டுள்ளது.