காவிரி நீர் திறப்பு - உச்சநீதிமன்றத்தை நாட முடிவு

 
supreme court supreme court

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி ஆறு

புதுதில்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு  உத்தரவு பிறப்பித்திருந்தது. 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையே காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றது.

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் விநாடிக்கு 5,000 கன அடி நீர் என்பது மிகக்குறைவு என கருத்து தெரிவித்துள்ள தமிழக அரசு, வினாடிக்கு 24,000 கன நீர் திறக்குமாறு வலியுறுத்தி வருகிறது.