எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு..

 
ep


அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

சிவகங்கை மாவட்டத்தில்  நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக , முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிசாமி, நேற்று  விமானம் மூலம் மதுரைக்குச் சென்றார்.  மதுரை விமான நிலையம் சென்றடைந்த  எடப்பாடி பழனிச்சாமி,  விமான நிலையத்திலிருந்து ஏர்லைன் பேருந்தில் வெளியே வந்தார்.  அப்போது ஏர்லைன் பேருந்தில்  உடன் பயணித்த சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஷ்வரன்  என்கிற நபர்  எடப்பாடி பழனிசாமியை  துரோகத்தின் அடையாளம் என கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.   

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு..

பேஸ்புக்கில் லைவ் செய்துகொண்டே ராஜேஷ்வரன் கோஷமிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது.  பின்னர்  விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராஜேஷ்வரனை, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தாக்கினர்.  விசாரணையில் அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,   சமூக வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்து வீடியோ பரப்பியதாக  அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.