நாயகன் ரீ-ரிலீஸ்க்கு தடைக்கோரி வழக்கு

 
x x

நாயகன் திரைப்படம் ரீரிலிசுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Kamal Haasan and Mani Ratnam's 'Nayagan' to re-release | ரீ-ரிலீஸாகும்  கமலின் “நாயகன்”

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படம், நடிகர் கமலஹாசன்  பிறந்தநாளை முன்னிட்டு மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் எஸ் ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடரந்துள்ள வழக்கில், நடிகர் கமலஹாசன் மற்றும் சரண்யா  உள்ளிட்டோர் நடித்த நாயகன் திரைப்படத்தை தனது நிறுவனம், ஏடிஎம் புரொடக்ஷன்ஸ்  என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை கடந்த 2023 அன்று பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இதனை மறைத்து V.S.பிலிம் இண்டர்நேஷனல்  என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இன்று நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது முறைகேடான நடவடிக்கை என தெரிவித்துள்ளார். எனவே நாயகன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்யப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இன்று வசூலான தொகையை நீதிமன்றத்தில் கட்ட உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி என் செந்தில்குமார் முன்பு மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்