இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை விரைவாக விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

 
இரட்டை இலை இரட்டை இலை

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை தேர்தல் அறிவிப்புக்கு முன்  தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு - BBC  News தமிழ்

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த புகார்கள் மீதான ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், ஆரம்பகட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின்பு ,  இந்த பிரச்சனை குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும் பீகார் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பளு அதிகமாக உள்ளது என்றும், அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, விசாரணை தொடர்பாக கால வரம்பு நிர்ணயிக்க தேவையில்லை என்றும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்றும் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை தேர்தல் அறிவிப்புக்கு முன் நடத்தி முடிக்க  வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி மனுதக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வர உள்ளது.