சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது வழக்குப்பதிவு!
தடையை மீறி போராட முயன்றதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் அளித்த நிலையில், சட்ட ஒழுங்கு பொதுமக்கள் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து தடையை மீறி வந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் தனியார் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் போராட்டத்தில் ஈடுபட முயலும் பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தடையை மீறி போராட முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று போராட்டம் நடத்த முயன்றதாக சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சீமான் உள்ளிட்ட 231 நிர்வாகிகள் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.