டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப்பதிவு!!
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/d6248efdbecc09ce8abdce238be79d54.png)
டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் அவரது கை, கால் முறிந்துள்ளது. அது தவிர பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில், சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் வாசனுக்கு கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.