லாரி மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி.. - திருச்சி அருகே சோகம்..

 
லாரி மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி.. - திருச்சி அருகே சோகம்..

திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே  சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.  அப்போது  மீது எதிர்பாராத விதமாக லாரி மீது  கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதுமாக  நசுங்கி சேதமடைந்தது.   அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் காரில்பயணித்த  சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

death

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் , உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு   பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  விபத்தில்  உயிரிழந்த 6 பேரும் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர்கள் என்பது  முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.