ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர்கள்!!
![tt](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/0f4d15be9e0816a3f1b1d0d3b53dc047.jpg)
தமிழகத்தில் திண்டுக்கல் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 1,11,434 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 40,356 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் விஜய சீலன் 31,866 வாக்குகள் பெற்று 4ம் இடத்தில் உள்ளனர்.
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 899 வாக்குகள் பெற்றுள்ளார். தேமுதிக 45,757 வாக்குகளை பெற்றுள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் டி .ஆர். பாலு ஒரு லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.