CAA & NRC-க்கு எதிராக சென்னை பெசன்ட் நகரில் ரங்கோலி போராட்டம்: கல்லூரி மாணவிகள் கைது!
தொடர்ந்து ஈடுபட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எங்களுடைய எதிர்ப்பை காட்டுவோம்’ என்றார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.
அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிகள் கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எழுத்துக்களுடன் அங்குள்ள வீடுகள் மற்றும் சாலையில் கோலம் போட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து பேசிய போராட்ட ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, ‘இதுபோன்ற போராட்ட முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எங்களுடைய எதிர்ப்பை காட்டுவோம்’ என்றார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.