திமுகவை குறை கூறுவதால், மக்கள் இங்கே நடக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மறந்து விடமாட்டார்கள் - கனிமொழி..!!

 
kanimozhi

திமுக துணை பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது 

முதலமைச்சர் விஜய் தி.மு.கவை தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ”தவெக இன்று ஆளுங்கட்சியாக இருக்கிறது. அவர்கள் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை தான் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, இன்னும் திராவிட முன்னேற்றக் கழகத்தையே குறை சொல்லிக் கொண்டிருக்க கூடாது.

இப்படி திமுகவை குறை கூறுவதன் மூலம் மக்கள் இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய தவறுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மக்கள் மறந்து விடமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.