#BREAKING : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வீட்டில் IT ரெய்டு..!

 
1

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க செல்வப்பெருந்தகை வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, பிரசாரத்துக்கு செல்ல விடாமல் இந்தி பேசும் வருமான வரித்துறையினர் தன்னை சிறைப்பிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவிடாமல் இந்தி பேசும் வருமானவரித்துறையினர் என்னை சிறைப்பிடித்துள்ளனர். எனது அரசியல் கடமைகளை செய்ய விடாமல் சோதனை என்ற பெயரில் சிறைபிடித்து வைத்துள்ளனர். ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே முடக்கி வைக்க முடிவெடுத்து சோதனை செய்து வருகின்றனர்.

இது ஜனநாயக செயல்பாடுகளை தடுக்கவும், எதிர்கட்சியின் குரலை ஒடுக்கவும் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கை செயலாக தான் இருக்கிறது. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்திற்கு வருவதால் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வருமானவரித்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் இருக்குமாறு முடக்கி வைத்துவிட்டனர். இதேபோல மு.க.அழகிரி வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.