#BREAKING : அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!
Apr 13, 2026, 14:53 IST1776072229070
சென்னையின் மயிலாப்பூரில் சாலை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களான நரசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு சொந்தமானது,
இந்நிலையில் சற்றுமுன் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவாக அந்த அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை. தற்போது தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால், தேர்தல் பறக்கும் படையினரும் இந்த அதிரடி சோதனையில் இணைந்துகொண்டு ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் இக்கட்டான சூழலில், ஆளுங்கட்சியின் மிக முக்கிய அமைச்சராக வலம் வரும் சேகர்பாபுவின் மகன்கள் தொடர்புடைய இடங்களில் இச்சோதனை நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ம



