#BREAKING: தங்கம், வெள்ளி.. ரூ.5,000 சரிந்தது.. நற்செய்தி!

 
Q

தங்கத்தின் விலை வரும் நாட்களில் ஏறுமா? அல்லது இறங்குமா? என்பது தான் நகைப் பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கேள்வியாக இருக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுரங்கச் செலவுகளை விட தங்கம் விலை உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் முன்னெப்போதும் இல்லாத லாபத்தை அடைந்திருப்பதாக உலக தங்கம் கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.

மறுபுறம், தங்கம் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். அமெரிக்க - ஈரான் போரால் தங்கம் விலை குறையத் தொடங்கியதால், இந்த விலை சரிவு நீடிக்கும் என நிபுணர்கள் கூறிவந்தனர். இதனால் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே குறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், அந்த கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை விறுவிறுவென உயர்ந்த ஒரு சவரன் ரூ. 1.20 லட்சத்தை தொட்டது. இருப்பினும், இந்த தற்காலிக விலையேற்றம் கடந்த வாரத்தில் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

ஒரு வாரத்தில் ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமாக சவரன் விலை குறைந்திருக்கிறது. இதனிடையே, தங்க இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன. அவ்வாறு குறைக்கப்படும் பட்சத்தில் சவரனுக்கு ரூ. 10 ஆயிரம் வரை குறைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

நேற்று (ஆகஸ்ட் 31) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.1,080 குறைந்து 14,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.260-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 1) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,15,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது