#BREAKING : கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றச்செயல்... கடுமையான தண்டனை உறுதி..! - முதல்வர் விஜய்..!

 
vijay

கோவையில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி செய்தி தமிழகத்தை உலுக்கியது என்றே சொல்லலாம். இந்த துறை சமயத்திற்கு பலரும் தங்கள் ஆதங்கத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில் இந்த கொடூர செயல் குறித்து தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது ,

கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. 

தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.