#BREAKING : அதிமுகவில் மீண்டும் பிளவு! சி.வி. சண்முகம் வீட்டில் ரகசிய கூட்டம்..!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் போர்க் கொடி தூக்கியதால் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று காலை எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்திய போது தற்போது, சிபி சண்முகம் தலைமையில் சுமார் 36 எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க இந்த யோசனையா அல்லது வேறு ஏதேனும் திட்டமா என்று அரசியல் வட்டாரத்தில் தற்போது குழப்பங்கள் எழுந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்களின் இந்த திடீர் ஆலோசனை அக்காட்சியினர் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

