காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை

 
suicide suicide

காதலி இறந்த துக்கம் தாங்காமல் பணிக்குச் சென்ற காதலன் சென்ற இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இராமநாதபுரத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

suicide

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் சசிகலா. சசிகலாவும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாண்டியின் வீட்டார் சசிகலாவை பெண் கேட்ட பொழுது தர மறுத்து சசிகலாவின் தந்தை கண்ணன், தனது உறவினரான முருகன் என்பவருக்கு சசிகலாவை திருமணம் முடித்துக் கொடுத்தார். இந்நிலையில் சசிகலா-முருகன் தம்பதியினருக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த சூழ்நிலையில் காதலர் பாண்டி மற்றும் சசிகலாவின் காதல் அவ்வப்போது செல்போன் மூலம் தொடர்ந்து உள்ளது 

காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் சசிகலாவின் கணவர் முருகன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றிருந்த நிலையில் பாண்டியுடன் சசிகலா தலைமறைவாகிவிட்டார். சசிகலாவின் தந்தை கண்ணனின் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாண்டியிடம் இருந்த சசிகலாவை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சசிகலாவின் தந்தை கண்ணன் வீட்டில் இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று திடீரென சசிகலா தன்னுடைய தந்தையின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த உச்சிப்புளி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வரும் நிலையில் காதலி சசிகலா தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த ஓட்டுனரான பாண்டி தர்மபுரி மாவட்டத்திற்கு சென்று இருந்த நிலையில் காதலி சசிகலா உயிரிழந்த செய்தி அறிந்த அங்கேயே ஒரு இடத்தில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்  காதலி இறந்த தூக்கம் தாளாமல் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வாழ்வில் காதலர்கள் ஒன்றினையா விட்டாலும் இறப்பில் ஒன்றிணைந்துள்ளனர் என்றே கூறலாம். தற்போது உயிரிழந்த சசிகலாவின் உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் காதலன் பாண்டியன் உடல் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.