வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ்

 
tn

சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாநகர், முகப்பேர், பாரிமுனை, ஓட்டேரி, கோபாலபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளிகளில் திரண்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

school

இதை தொடர்ந்து சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக, இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது . மர்ம நபரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க சைபர் க்ரைம் போலீசார் முயன்று வரும் நிலையில், வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி| மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. 


 police

இந்நிலையில் சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் பட்டியலை சேகரிக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.  இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து யாரேனும் கைது செய்யப்பட்டனரா என்ற தகவலை பெற திட்டமிட்டுள்ளது. மிரட்டல் அனுப்பிய நபரின் மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடிக்கவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.