ஈரோட்டில் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை

 
Erode Bus Stop

ஈரோட்டில், பேருந்து நிலையம், ரயில் நிலைய உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள்ளனர். 

இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபரு ஒருவர் ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், மனிக்கூண்டு  உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அட்டைந்த சென்னை போலீசார் உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். சென்னை போலீசார் கொடுத்த தகவலை அடுத்து உடனடியாக சம்பவ இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், மணிக்கூண்டு பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் உதவியுடனும் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை செய்த நிலையில், சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எதற்காக மிரட்டல் விடுத்தார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஈரோட்டில் வெடிகுண்டு இருப்பதற்காக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.