#JUSTIN சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் வெடி விபத்து - ஒருவர் பலி

 
Death

சாத்தூர் அருகே பட்டாசு கடையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

fire

சிவகாசி , சாத்தூர் உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளும் இங்கு அதிக அளவில் காணப்படுகிறது. தீபாவளி பண்டிகை மட்டுமின்றி மற்ற விசேஷ நாட்களுக்காகவும் , வெளியூர்களில் இருந்து கூட வாடிக்கையாளர்கள் இங்கு வந்து பட்டாசுகளை வாங்கி செல்வது வழக்கம்.

fire

இந்நிலையில் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஒரு தொழிலாளி உயிரிழந்து உள்ளார். அத்துடன் பட்டாசு கடையில் இருந்த ஊழியர்கள் சிலர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வெடி விபத்தில் ஒரு கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது.