“ஆ.ராசா ஊழல் பெருச்சாளி” என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை – ஹெச்.ராஜா

 

“ஆ.ராசா ஊழல் பெருச்சாளி” என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை – ஹெச்.ராஜா

ஆ.ராசா விரைவில் திகார் சிறையில் தள்ளப்படுவார் என்று பாஜகவின் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

“ஆ.ராசா ஊழல் பெருச்சாளி” என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை – ஹெச்.ராஜா

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் கட்சியான அதிமுகவும்,. எதிர்கட்சியான திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் கூறி வருகிறார்கள். இதில் பாஜகவும் இணைந்து கொண்டுள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா, ” தேசத்துரோகி, ஊழல் பெருச்சாளி ஆ.ராசாவுக்கு என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அவர் விரைவில் 2ஜி ஊழலுக்காக திகார் சிறைக்கு செல்வார். தமிழகத்தில் முருகனின் புரட்சி ஆரம்பித்துள்ளது. அதனால் தான் ஸ்டாலின் கையில் வேல் வந்துள்ளது. ஸ்டாலினையே வேல் தூக்க வைத்த முருகனின் செயல் அற்புதம். தைப்பூசத்திற்கு பழனி சென்றுவிட்டு திருநீறு பூசுவது மட்டும் போதாது. முருகனை அவமதித்த கருப்பர் கூட்டத்திற்கு உதவி செய்யும், ஸ்டாலினையும், திமுகவையும் ஒரு சீட் கூட ஜெயிக்கவிடக் கூடாது. இப்படி செய்யாமல் விட்டுவிட்டு பழனிக்கு போவதும், திருநீறு பூசுவதும் போலித்தனமானது” என்றார்.

“ஆ.ராசா ஊழல் பெருச்சாளி” என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை – ஹெச்.ராஜா

முன்னதாக திருவள்ளுர் மாவட்டத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுகவினர் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் ஒன்றை பரிசாக அளித்தனர். அதை ஸ்டாலின் வாங்கி கையில் வைத்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. அத்துடன் அதிமுக – பாஜக கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் ஹெச். ராஜா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்துக்களே சிந்திப்பீர் 8 கிலோ வெள்ளி வேல் என்றவுடன் அதை வாங்கிக் கொண்டு போஸ் கொடுத்த ஸ்டாலின் தைப்பூசத்திற்கு இன்று வாழ்த்துச் சொன்னாரா? இந்து விரோதி திருந்த மாட்டானுக. தேர்தலில் இந்து விரோத திமுகவை தோற்கடிப்பதே தீர்வு” என்று பதிவிட்டு விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.