"பாஜக சார்பில் 4 நாட்களுக்கு 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி" - அண்ணாமலை

 
tn

சென்னை திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார்.

tn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், அயோத்தியில் வரும் ஜனவரி 22 அன்று, பகவான் ஶ்ரீராமரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தியதை அடுத்து, இன்றைய தினம் காலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில்,  @BJP4Tamilnadu நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டோம். 



மேலும், இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு,  @BJP4Tamilnadu  சார்பாக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.  @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள் இந்த இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.