"பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்" - நாராயணன் திருப்பதி கண்டனம்!!

 
narayanan thirupathi

திமுக பேச்சாளர் ஒருவர் பாஜக மகளிர் நிர்வாகிகள் குறித்தும் குஷ்பூ, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்களை  ஒருமையில் பேசியதற்கு  நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

 திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி பாராட்டும் பொதுக்குழு விளக்க கூட்டம் சென்னை ஆர். கே. நகரில் நடந்துள்ளது.   இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட நிலையில், பேச்சாளர்  சைதை சாதிக் பாஜக மகளிர் நிர்வாகிகள் குறித்தும்,  பாஜகவில் இருக்கும் குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கௌதமி உள்ளிட்ட நடிகைகளை அவமரியாதையாக பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதற்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதைக்கண்ட திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 
ச்

இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், தி மு கவின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் திருமதி. குஷ்பூ மற்றும் பாஜக வை சேர்ந்த திரைப்பட நடிகைகள் குறித்து ஆபாசமாக, தரக்  குறைவாக பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து குஷ்பு அவர்களின் ட்விட்டர் பதிவிற்கு தி மு கவின் துணைப்பொது செயலாளரும்,மக்களவை உறுப்பினருமான திருமதி. கனிமொழி  அவர்கள், இதற்காக தாம் மன்னிப்பு கேட்பதாகவும், இது போன்ற கருத்தை தங்களின் தலைவர் முதல்வர் ஸ்டாலின்  அவர்கள் ஏற்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு பெண் குறித்து தரக்குறைவாக பேசிய அந்த நபரை இந்நேரம் தமிழக காவல் துறை கைது செய்து சிறையிலடைத்திருக்க வேண்டும்.

khushbu

 அதை விடுத்து. மன்னிப்பு கேட்பதும், முதல்வர் ஏற்க மாட்டார் என்று சொல்வதும் உதட்டிலிருந்து வரும் வார்த்தைகள் தானேயன்றி மனதிலிருந்து வரும் வார்த்தைகள் அல்ல என்றே கருதப்படும். பெண் வன்கொடுமை சட்டத்தில் அந்த தரம்கெட்ட நபரை கைது செய்து, உரிய தண்டனை பெற்று தர வேண்டிய பொறுப்பும்,கடமையும்  தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் உள்ளது.  


இனி இதுபோன்ற பேச்சுக்களுக்கு இடம் அளிக்காமல் இருக்க, அந்த நபரை தி மு கவிலிருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டியது  திமுகவின் துணை பொதுச்செயலாளராக திருமதி.  கனிமொழி  அவர்களின் கடமை. இல்லையேல் அந்த நபரின் பேச்சுகளுக்கு தி மு கவே பொறுப்பேற்க வேண்டும் என்பதோடு திமுக  பெண்களுக்கு எதிரான இயக்கமாகவே மக்களால் கருதப்படும்." என்று குறிப்பிட்டுள்ளார்.